தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்கு காணிகள் விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்வதான சர்ச்சைக்குரிய காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை, சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திருமதி முருது பெர்ணான்டோ இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்த சுற்றுநிருபத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட பொது அறிவித்தல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் தமது காணிகளை நவம்பர் மாதம் 20ஆம் திகதி 2011ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிய வேண்டுமென கூறியது.
Continue reading →