செய்திகள்

நாட்காட்டி

March 2010
M T W T F S S
« Feb    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

இணைப்பில்

வாசகர்களின் கருத்துக்களம்

    E-Mail Address : info@thenakam.com எமது மின்னஞ்சல் முகவரி : info@thenakam.com

    தமிழ்க்கூட்டமைப்பின் இரகசியங்களை அம்பலப்படுத்தப்போகிறேன்: சிவநாதன் கிஷோர்

    kisoor1

    தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் பிரச்சினைகள், அந்த கூட்டணி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் kishorஆகியவற்றை அம்பலப்படுத்தப்போவதாகவும் அதற்காக இன்று அல்லது நாளை விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைக்கும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிஷோர், தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வன்னியில் போட்டியிடவுள்ளதாக அடித்துக்கூறியுள்ளார்.

    தன்னைப்போலவே, கூட்டமைப்பின் இன்னொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இன்னமும் உத்தியோகபூர்வ தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை

    தமிழர்களுக்கு இந்தியா மீது கோபம்; ஆனால், வர்த்தக உறவுகளில் ஆர்வம்

    Noth&East

    விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சிறிலங்கா படைகள் கொன்று குவித்ததை இந்தியா தொடர்ந்து வாசிக்க…

    கொழும்பில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் நிலம் மற்றும் சொத்துக்களின் விலையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி வாசிகளும் நில விற்பனை முகவர்களும் தெரிவித்துள்ளனர்.

    wellawatta

    மிக முக்கியமாக வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை (Wellawatta&Kotahena) பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வடக்கு பகுதிகளில் உள்ள தங்கள் தாயக ஊர்களுக்கு திரும்பிச் செல்வதே இப்பகுதியில் சொத்துக்களின் விலைகள் கடுமையான சரிவை சந்தித்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    வீடுகளுக்கான மாத வாடகைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் தொடர்ந்து வாசிக்க…

    தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும்

    Sampanthan

    எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும்.

    அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக தொடர்ந்து வாசிக்க…

    சாபாநாயகர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

    lokkubandara

    முப்பத்து மூன்று வருடகாலம் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

    நேற்று பண்டாரவளை நகரில் ஜனாதிபதி தொடர்ந்து வாசிக்க…

    சரத் பொன்சேகா அரசியல்வாதிகளின் அரசியல் லாபத்துக்கு பலியாகியுள்ளார் என்றால் அது மிகையாகாது

    Genral Co-op

    இந்த பொதுத்தேர்தலில் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். அரசியல் கட்சிகளின் தொடர்ந்து வாசிக்க…

    சில அரச அதிகாரிகளின் இனவாத போக்கு கண்டிக்கத்தக்கது.

    lanka_logo

    ‘அரச கரும மொழி அமுலாக்கம்…’ இது அடிக்கடி நமது காதுகளில் ஒலிக்கும் வார்த்தை. நமது நாட்டில் மொழி

    தொடர்ந்து வாசிக்க…

    சரத் பொன்சேகாவின் கைது அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல. இராணுவச் சட்டதிட்டங்களை மீறிப் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் உட்பட்டமையே கைதுக்கான காரணமாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

    YAPA

    எனினும் சரத் பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி, எதிர்வரும் தேர்தலில் அதனைப் பயன்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்து வாசிக்க…

    கொழும்பு, புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயன்ற ஐ. தே. க., ஜே. வி. பி. ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அவர்கள் கற்களை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.

    CMB Puthukadai

    சுலோகங்களை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு கற்களை எறிந்து ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து வாசிக்க…

    அன்னமா யானையா? எதிர்க்கட்சிகளிடையே தோன்றியுள்ள இழுபறி நிலை.

    UNP Sarath Logo

    ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் 2010 நவம்பர் 19ம் திகதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து பொது தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி பாராளுமன்றம் தொடர்ந்து வாசிக்க…

    ஐ.ம.சு.முன்னணியின் முதலாவது தேர்தல் கூட்டம் அநுராதபுரத்தில்! பிரதம அதிதியாக ஜனாதிபதி.

    mahinda election

    நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இக்கூடத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்

    எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று தெரிவிக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிக்கு செல்ல பயந்துக் கொண்டிருந்தார்

    Sri Lanka Civil War

    எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று தெரிவிக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிக்கு செல்ல பயந்துக் கொண்டிருந்தார் அவரை ஜனாதிபதி ராஜபக்ஷ தான் சமாதானப்படுத்தி தைரியப்படுத்தினார் என்று பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கையில் எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் என்றும் தெரிவித்துள்ளார் ஆனால் வடக்கில் போர் முடிந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சிக்கு விஜயம் செய்த போது உடன் வர அவர் பயப்பட்டார் தைரியம் இல்லாமல் வரமறுத்தார். போர் முடிந்ததும் ஜனாதிபதி ராஜபக்ஷ கிளிநொச்சி போக விரும்பினார் அதை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிடமும் தெரிவித்தார்.

    ஆனால் அந்த யோசனையை விட்டுவிடுமாறு ஜனாதிபதியிடம் தெரிவித்தார் பொன்சேகா. மேலும் கிளிநொச்சிக்கு ஜனாதிபதியுடன் வரவும் அவர் பயந்தார். போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறினார் தனது பயத்தை வெளிப்படுத்தினார் ஆனால் ஜனாதிபதி பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார் பயப்பட வேண்டாம் தைரியமாக வாருங்கள் என்றும் கோரினார். இதையடுத்து வேறுவழியில்லாமல் தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் போரில் பாதித்த பகுதிக்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தார் ஜனாதிபதி ராஜபக்ஷ.

    கடும்போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது போர்களத்திற்கு சென்ற முதல் உலக ஜனாதிபதி என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது அதேபோல் மாவிலாறு சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது போரை அறிவித்தார் ராஜபக்ஷ அப்போது பொன்சேகா களத்திலேயே இல்லை விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலில் சிக்கி அவர் மருத்துவமனையில் இருந்தார். மேலும் விடுதலைப்பலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் நாட்களும்கூட போர்முனைக்கு ஒருமுறைகூட சென்றதில்லை கொழும்பில் உட்கார்ந்துக் கொண்டு உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

    நான் ஒருபோதும் தோல்வியை சந்தித்ததில்லை என்று தெரிவிக்கும் பொன்சேகாவின் தலைமையில் தான் இலங்கை இராணுவத்திற்கு முகமாலை பகுதியில் 3முறை தோல்வி கிடைத்தது கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்தனர் என்று பாதுகாப்பு தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

    இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    Nomination

    23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார். ஜனாதிபதித் தொடர்ந்து வாசிக்க…

    ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இராணுவத் தளபதி கண்டனம்!

    Jagath

    புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து படையினர் அடைந்த வெற்றியை காட்டிக்கொடுக்கும் வகையில் இராணுவத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்ந்து வாசிக்க…

    வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) நடவடிக்கை.

    Ammaan&Basil

    கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 150000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து வாசிக்க…