செய்திகள்

நாட்காட்டி

February 2010
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728

இணைப்பில்

வாசகர்களின் கருத்துக்களம்

    E-Mail Address : info@thenakam.com எமது மின்னஞ்சல் முகவரி : info@thenakam.com

    ஐ.ம.சு.முன்னணியின் முதலாவது தேர்தல் கூட்டம் அநுராதபுரத்தில்! பிரதம அதிதியாக ஜனாதிபதி.

    mahinda election

    நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இக்கூடத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்

    எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று தெரிவிக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிக்கு செல்ல பயந்துக் கொண்டிருந்தார்

    Sri Lanka Civil War

    எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று தெரிவிக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிக்கு செல்ல பயந்துக் கொண்டிருந்தார் அவரை ஜனாதிபதி ராஜபக்ஷ தான் சமாதானப்படுத்தி தைரியப்படுத்தினார் என்று பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கையில் எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் என்றும் தெரிவித்துள்ளார் ஆனால் வடக்கில் போர் முடிந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சிக்கு விஜயம் செய்த போது உடன் வர அவர் பயப்பட்டார் தைரியம் இல்லாமல் வரமறுத்தார். போர் முடிந்ததும் ஜனாதிபதி ராஜபக்ஷ கிளிநொச்சி போக விரும்பினார் அதை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிடமும் தெரிவித்தார்.

    ஆனால் அந்த யோசனையை விட்டுவிடுமாறு ஜனாதிபதியிடம் தெரிவித்தார் பொன்சேகா. மேலும் கிளிநொச்சிக்கு ஜனாதிபதியுடன் வரவும் அவர் பயந்தார். போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறினார் தனது பயத்தை வெளிப்படுத்தினார் ஆனால் ஜனாதிபதி பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார் பயப்பட வேண்டாம் தைரியமாக வாருங்கள் என்றும் கோரினார். இதையடுத்து வேறுவழியில்லாமல் தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் போரில் பாதித்த பகுதிக்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தார் ஜனாதிபதி ராஜபக்ஷ.

    கடும்போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது போர்களத்திற்கு சென்ற முதல் உலக ஜனாதிபதி என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது அதேபோல் மாவிலாறு சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது போரை அறிவித்தார் ராஜபக்ஷ அப்போது பொன்சேகா களத்திலேயே இல்லை விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலில் சிக்கி அவர் மருத்துவமனையில் இருந்தார். மேலும் விடுதலைப்பலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் நாட்களும்கூட போர்முனைக்கு ஒருமுறைகூட சென்றதில்லை கொழும்பில் உட்கார்ந்துக் கொண்டு உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

    நான் ஒருபோதும் தோல்வியை சந்தித்ததில்லை என்று தெரிவிக்கும் பொன்சேகாவின் தலைமையில் தான் இலங்கை இராணுவத்திற்கு முகமாலை பகுதியில் 3முறை தோல்வி கிடைத்தது கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்தனர் என்று பாதுகாப்பு தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

    இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    Nomination

    23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார். ஜனாதிபதித் தொடர்ந்து வாசிக்க…

    ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இராணுவத் தளபதி கண்டனம்!

    Jagath

    புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து படையினர் அடைந்த வெற்றியை காட்டிக்கொடுக்கும் வகையில் இராணுவத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்ந்து வாசிக்க…

    வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) நடவடிக்கை.

    Ammaan&Basil

    கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 150000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து வாசிக்க…

    இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி.(படங்கள் இணைப்பு)

     Water 01  Water 05

    15.12.2009 செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த 24மணி நேரத்திற்குள் மட்டு மாவட்டத்தில் இவ்வருடத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 241.7 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதாக மட்டு மாவட்ட வானிலை அவதான நிலைய தொடர்ந்து வாசிக்க…

    பலத்த பேரிடியுடன் கூடிய பேயாப்பெருமழையினால் மட்டக்களப்பில் பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக புகையிரதம் தடம் புரள்வு.(படங்கள் இணைப்பு)

     Rail 01

    நேற்று 14.12.2009 திங்கட் கிழமை இரவு 8.15 க்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி புறப்பட்ட “மீனகயா” புகையிரதம் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புகையிரத தொடர்ந்து வாசிக்க…

    ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 65 வீத வாக்குகள் பெற்று வெற்றியீட்டுவார்

    rajitha

    தேசத்துரோகிகளோடு இணைந்துள்ள சரத் பொன்சேகாவைத் தோற்கடித்து 65 வீத வாக்குகள் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வாசிக்க…

    ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவமே பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள காரணம் படைவீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் இராணுவத் தளபதி

    Jagath

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் சரியான தலைமைத்துவமும், வழிகாட்டலுமே இந்த நாட்டில் நிலவிய 30 வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்திற்குள் வெற்றிகொள்ள காரணம் என்று

    தொடர்ந்து வாசிக்க…

    சரணடைந்த புலிகளை கொல்லுமாறு கோதாபய ஒருபோதும் உத்தரவிடவில்லைஅரசு உறுதியாக நிராகரிப்பு ஜெனரலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை

    mahinda-samarasinge

    சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொல்லுமாறு அரசாங்கமோ அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவோ ஒருபோதும் உத்தரவிட்டிருக்கவில்லை என்று திட்டவட்டமாக தொடர்ந்து வாசிக்க…

    அரசியல் தீர்வுப் பயணத்தில் பங்காளிகளாக வேண்டும்

    090525displaced

    அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை ஜனாதிபதித் தேர்தலையடுத்து உடனடியாக மேற்கொள்ளப் படும் என்று இலங்கைத் தூதுக்குழுவொன்று இந்தியாவுக்கு உறுதியளித்திருக்கின்றது. ஜனாதிபதியின் தொடர்ந்து வாசிக்க…

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க இலங்கை கலைஞர்கள் சங்கம் தீர்மானம்

    SL POLITICS

    ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்கவிருப்பதாக இலங்கை கலைஞர்கள் தொடர்ந்து வாசிக்க…

    ஐ. தே. க. - ஜே. வி. பி. கூட்டுக்குள் முரண்பாடு: இரு வாரங்களுக்குள் பொன்சேகாவின் பிரசாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படும்

    sirisena01

    ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு காரணமாக அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்ந்து வாசிக்க…

    இராணுவமயமாகும் அரசியலும் அரசியல்மயமாகும் இராணுவமும்

    vasu

    ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்காசமசமாஜக் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய சோசலிச மக்கள் முன்னணி நேற்று முன்தினம் கொழும்பில் தொடர்ந்து வாசிக்க…

    அரசியல் அனுபவமற்றவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தால் நாட்டுக்கு ஆபத்து பொன்சேகா தொடர்பாக பீரிஸ் கருத்து

    Prof.-G.L.Peiris

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக மட்டுமே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து தொடர்ந்து வாசிக்க…